சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக தென் ரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சென்னை-செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். மேலும், நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஆகஸ்ட் 17ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும். பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்களுக்கு முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு தென் ரயில்வே முன்பதிவு மையங்கள் மற்றும் இணையவழி சேவைகள் மூலம் தொடங்கும். இந்த சேவை, விடுமுறை காலத்தில் பயண நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.














