ரஞ்சிக் கோப்பையை வென்றால் பிஎம்டபிள்யூ கார்

ரஞ்சிக் கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கோடி பரிசும் பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ரஞ்சி கோப்பை போட்டியில் மேகலாயாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ரஞ்சிக்கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்துள்ளது. தற்போது ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு மாநில கிரிக்கெட் சங்கம் வெகுமதிகளை அறிவித்துள்ளது. அதில் பிளேட் குரூப் சாம்பியன்களுக்கு ரூபாய் பத்து லட்சமும், சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐம்பதாயிரம் பரிசும் வழங்குவதாக […]

ரஞ்சிக் கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கோடி பரிசும் பிஎம்டபிள்யூ காரும் வழங்கப்படும் என ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ரஞ்சி கோப்பை போட்டியில் மேகலாயாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் ரஞ்சிக்கோப்பையின் எலைட் குரூப் போட்டிக்கு நுழைந்துள்ளது. தற்போது ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு மாநில கிரிக்கெட் சங்கம் வெகுமதிகளை அறிவித்துள்ளது. அதில் பிளேட் குரூப் சாம்பியன்களுக்கு ரூபாய் பத்து லட்சமும், சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஐம்பதாயிரம் பரிசும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இவை மட்டும் அன்று அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஞ்சிக் கோப்பை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் பிஎம்டபிள்யூ கார் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒட்டுமொத்த அணிக்கும் ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu