கடந்த 2022 அக்டோபர் மாதத்தில், சக்தி வாய்ந்த காமா கதிர்களால் பூமி தாக்கப்பட்டது. சுமார் 10000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இத்தகைய தாக்குதல் நிகழும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். GRB 221009A என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் போது, பூமியின் ஓசோன் படலத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. தற்காலிகமாக ஒரு சில பகுதிகளில் ஓசோன் படலம் முழுமையாக தகர்க்கப்பட்டது. இதுகுறித்து தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், இது விண்வெளியில் ஏற்பட்ட சூப்பர் நோவா வெடிப்பால் நிகழ்ந்த விளைவாக தெரிவித்துள்ளனர்.பூமியிலிருந்து 1.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில், சூப்பர் நோவா வெடிப்பு நிகழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இந்த நிகழ்வே பூமியின் ஓசோன் படல பாதிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த சூப்பர் நோவா வெடிப்பால் வெளியான அதிசக்தி வாய்ந்த காமா கதிர்களால் ஓசோன் படலம் பாதிப்படைந்துள்ளதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், “சூப்பர் நோவா வெடிப்பு பூமியிலிருந்து வெகு தொலைவில் ஏற்பட்டதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை; இதுவே பூமிக்கு அருகில் நிகழ்ந்திருந்தால் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கலாம்” என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.