ராயபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா

February 14, 2023

ராயபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், ராயபுரம் மண்டலம் 53-வது வார்டுக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் உள்ள மின்ட் மேம்பாலத்தின் கீழ் 13,708 ச.மீ. பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவில் நடைபாதை, முதியோர்கள் பயன்படுத்தக்கூடிய பகுதி, மூத்த குடிமக்களுக்கான திறந்தவெளி […]

ராயபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தின் கீழ், ராயபுரம் மண்டலம் 53-வது வார்டுக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் உள்ள மின்ட் மேம்பாலத்தின் கீழ் 13,708 ச.மீ. பரப்பளவில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவில் நடைபாதை, முதியோர்கள் பயன்படுத்தக்கூடிய பகுதி, மூத்த குடிமக்களுக்கான திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், திறந்தவெளி யோகா பகுதி, சிலைகள் மற்றும் சுவரோவியங்கள், மழைநீர் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய கட்டமைப்பு, இருக்கை வசதிகள், மின்வசதி, கழிப்பறை, இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் சுமார் 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டு மாநகராட்சி மூலம் இலவசமாக பராமரிக்கப்படும். இந்தப் பூங்கா பணியானது ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu