காவிரிக் கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 1.12 கோடி மரக்கன்றுகளை ஒரே வருடத்தில் நட்டு உலக சாதனை படைத்துள்ளது.
சுற்றுச்சூழல் வரலாற்றில் ஒரு சாதனையாக காவிரி கூக்குரல் இயக்கம் 1.12 கோடி மரக்கன்றுகளை தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களில் நட்டு உலக சாதனை படைத்துள்ளது. இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணிக்கை 10.9 கோடியாக உயர்ந்துள்ளது. காவிரி கூக்குரல் இயக்கத்தில் விடாமுயற்சியால் கடந்த ஒரு வருடத்தில் 48,748 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 12 லட்சத்து 47,630 மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர். இந்த காவிரி கூக்குரல் இயக்கம் என்பது சத்குரு அவர்களால் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்டதாகும். இது மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது. விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது, மரம் சார்ந்த விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிப்பது போன்ற பல்வேறு பணிகளை இந்த காவிரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது. விவசாயிகளில் நலன்களுக்காக மேலும் பலனுள்ள பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது. இந்த மாதம் தொடங்கியுள்ள நடப்பு நிதியாண்டில் காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.