மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயம்

மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை […]

மாதந்தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவின் பால் வாங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது 25 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் நீண்ட காலமாக வழங்கி வருகிறது.

இவ்வாறு அட்டைகள் மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் இதற்கான பணியை மேற்கொள்ளுமாறு மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu