வேளாண் விளைபொருள்களுக்கு செஸ் வரி விதிக்கும் நடைமுறை வணிகர்களுக்கு பாதிப்பாக இருந்து வந்தது.தமிழகத்தில் வேளாண் விளை பொருளுக்கு விற்பனை மையங்களில் செஸ் வரி விதிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. இது அரசு அதிகாரிகள் மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியிலும், வாகனங்கள் செல்லும் வழியிலும் ஆய்வு செய்து சட்டத்திற்கு புறம்பாக வரி வசூலித்து வந்தனர். இதனால் வேளாண் விளைபொருள் விற்பனையில் ஈடுபடும் வணிகர்கள் மற்றும் பலசரக்கு நடத்திவரும் வணிகர்களும் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு செஸ் வரிவிதிப்பு சம்பந்தமாக 84/20.4.2022 ஆணை பிறப்பித்தது. இந்த ஆணைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தது. மேலும் இந்த ஆணையை ரத்து செய்யக்கோரி முதலமைச்சருக்கு அழுத்தம் தெரிவித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 3ஆம் தேதி அரசாணை எண் 1 - இன் மூலம் மூலம் அரசாணை எண் 84/24.04. 2022 திரும்ப பெறப்பட்டது. இதன்படி இனி விளை பொருள்களுக்கு செஸ் வரி கட்ட வேண்டிய கட்டாயம் இல்லை. அரசாணை எண் 84 ரத்து செய்யப்பட்டதனால் வணிகர் சங்கங்களின் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.