மத்திய அரசு 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்ற கொள்கையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார், 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்ற கொள்கையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், இவ்வாறு தோல்வி அடைய செய்யக்கூடாது என்ற நிபந்தனை இருந்தது. புதிய கொள்கையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதில் மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த வகுப்பிற்கு அவர்கள் முன்னேற்றப்படமாட்டார்கள். இந்நிலையில், 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் தோல்வி அடைந்தவர்களாகவே கருதப்படுவார்கள். குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.














