மத்திய அரசு 10 மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமிக்க ஆலோசனை செய்து வருகின்றது.
இந்தியாவில் பல மாநிலங்களில் கவர்னர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசு புதிய கவர்னர்களை நியமிக்க உள்ளது. இதில், சில மாநிலங்களில் கவர்னர்கள் 3 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பதவியில் உள்ளனர். இவர்களது செயல்பாடுகள் மத்திய அரசுக்கு திருப்தி அளித்துள்ள நிலையில் அவர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் கவர்னர் ரவியின் பதவி மாற்றமும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.