அதானி டிபென்ஸ் நிறுவனம், இந்திய கடற்படைக்கு இரண்டாவது திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோனை வழங்கியுள்ளது.
திருஷ்டி-10 ஸ்டார்லைனர் ட்ரோன், சுமார் 32,000 அடி உயரத்தில் 48 மணி நேரம் வரை பறக்கக் கூடிய திறன் கொண்டது. மேலும், 50 கிலோ எடையை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு, நேட்டோவின் தரச்சான்றிதழையும் பெற்றுள்ள இந்த ட்ரோன், கடல் கொள்ளை சம்பவங்களை தடுக்கவும், கடற்பகுதியை கண்காணிக்கவும் உதவும் என்று கருதப்படுகிறது.