அதானி குழுமத்தின் முதலீட்டை 1.3 லட்சம் கோடியாக உயர்த்த திட்டம்

June 25, 2024

அதானி குழுமம் தனது நிறுவனங்களில் 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முதலீட்டில், 70% அளவு அதானி குழுமத்தின் ரொக்க பண வருவாய் மூலமாகவும், எஞ்சிய முதலீடு கடன் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில் அதானி குழுமத்தின் பல நிறுவனங்கள் முக்கிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன. எனவே, […]

அதானி குழுமம் தனது நிறுவனங்களில் 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முதலீட்டில், 70% அளவு அதானி குழுமத்தின் ரொக்க பண வருவாய் மூலமாகவும், எஞ்சிய முதலீடு கடன் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதி ஆண்டில் அதானி குழுமத்தின் பல நிறுவனங்கள் முக்கிய இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன. எனவே, அதற்கான முதலீட்டு தொகையும் உயர்ந்துள்ளது. கடந்த 2024 ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் நிதி ஆண்டுக்கு 40% உயர்வாக முதலீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் 70% முதலீடு பசுமை எரிசக்தி தொடர்பான முதலீடுகளுக்காக செலவு செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. எஞ்சிய 30% முதலீட்டில் அதானி குழுமத்தின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுக கட்டமைப்புகள் பெருமளவு முதலீட்டை பெறும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu