குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையின் உயரத்தை விட அதிகமான உயரத்தில், ‘காற்றாலை’ ஒன்றை அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அமைத்துள்ளது. இந்த காற்றாலையின் விசிறிகள் குஜராத்தில் உள்ள முந்திராவின் பெரிய ஜெட் இறகுகளைவிட அகலமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காற்றாலை, அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் புத்தாக்க எரிசக்தி விரிவாக்க திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் முந்தரா வின்ட் டெக் லிமிடெட் நிறுவனம் (Mundra WindTech Limited), இந்த காற்றாலையை நிறுவி உள்ளது. இது, 200 மீட்டர் உயரத்தில், 5.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒற்றைக் காற்றாலை, சுமார் 4000 வீடுகளுக்குத் தேவையான மின்சார உற்பத்தியை கையாளும் திறன் படைத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரிய காற்றாலைகளை வருங்காலத்தில் நிறுவும் திட்டத்தில் அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பணியாற்றி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய முந்தரா வின்ட் டெக் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மிலிந் குல்கரணி, “இந்தியாவின் உயரமான காற்றாலை, 19 நாட்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்வாகும். இதன் கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இதற்கான சான்றிதழ்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று கூறினார்.