அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் முக்கிய ஏற்றுமதிகளுக்கு மொத்தம் 50% வரியை அமுல்படுத்தியுள்ளது; ஜவுளி, ஆடைகள், நகைகள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தபடி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் 25% வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கெனவே உள்ள 25% வரியுடன் சேர்த்து, மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 27 அதிகாலை 12:01 மணி முதல் புதிய வரி நடைமுறையில் அமுலாகும். ரத்தினம், நகைகள், ஜவுளி, ஆடைகள், இறால் போன்ற முக்கிய ஏற்றுமதித் துறைகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.