சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்பட உள்ளது.
தினந்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு மாலை 5:20 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியுடன் இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது. இதேபோல கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலும் நாளை முதல் கூடுதலாக மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது