கோடை காலத்தில் மின் தேவையைச் சந்திக்க கூடுதல் மின்சாரம் வாங்க முடிவு.
தமிழ்நாடு மின்வாரியம், கோடை காலத்தில் மின் தேவையைச் சந்திக்க கூடுதல் மின்சாரம் வாங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதியை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை 1300 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2610 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும். மே மாதத்தில் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 650 மெகாவாட், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 1080 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.