திருப்பூர்- கோவை இடங்களில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்பு

September 30, 2023

திருப்பூரில் நடைபெறும் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுத்துணி விற்பனை மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. வட மாநிலங்களில் காடா துணியின் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அவர்கள் துணியின் விலையை குறைவாக கொடுக்க முடிகிறது. உலக வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஐந்து மாதத்தில் திருப்பூர் கோவை மாவட்டங்களில் மட்டும் ரூபாய் 1000 கோடி மதிப்பிலான காடா […]

திருப்பூரில் நடைபெறும் விசைத்தறிகள் மூலம் ஜவுளி உற்பத்தி தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுத்துணி விற்பனை மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. வட மாநிலங்களில் காடா துணியின் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அவர்கள் துணியின் விலையை குறைவாக கொடுக்க முடிகிறது. உலக வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஐந்து மாதத்தில் திருப்பூர் கோவை மாவட்டங்களில் மட்டும் ரூபாய் 1000 கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு தேவையான அதிகாரிகள் குழுவை தனியாக அமைத்து, ஆராய்ந்து, வங்கி கடன் உதவி ஆகியவற்றை செய்து கொடுத்தால் விசைத்தறி ஜவுளி மற்றும் தொழில் பழைய நிலைக்கு திரும்பும் எனவும், மேலும் இயற்கை பருத்தி இழைகளால் செய்யப்பட்ட காடா துணி பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் எனவும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu