உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 30 ஆவது லீக் ஆட்டம் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையே புனேவில் நடைபெற்றது.
உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டிகள் புனேவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி போட்டியின் முடிவில் 241 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களை இழந்தது.
ஆப்கானிஸ்தான் அணி 242 என்னும் எளிய இலக்கை நோக்கி களமிறங்கியதில் துவக்க வீரர் ரஹ்மதுல்லா ரன் எதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய இப்ராஹிம் சத்ரான் 39 ரன்கள் எடுத்தார். அடுத்து ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஹஸ்மதில்லா 62 மற்றும் 58 ரன்களை எடுத்தனர். போட்டியின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து ஆப்கானிஸ்தான அணி 41.5 ஓவர்கள் முடிவில் 242 ரன்கள் அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.