7 ஆண்டுகளுக்கு பின் சவுதி அரேபியாவில் இன்று ஈரான் தூதரகத்தை திறக்க உள்ளது.
சவுதி அரேபியா - ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வந்தது. மோதல்போக்கு காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் சவுதி அரேபியாவில் செயல்பட்டு வந்த தங்கள் நாட்டு தூதரகத்தை ஈரான் மூடியது. இதையடுத்து சவுதி அரேபியா - ஈரான் இடையேயான உறவை மேம்படுத்த சீனா முயற்சிகள் மேற்கொண்டது. அந்த முயற்சியின் பயனாக கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி சவுதி - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், இரு நாடுகளும் தங்கள் தூதரகங்களை திறக்க 2 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட்டுள்ள நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் ஈரான் தங்கள் தூதரகத்தை திறக்க உள்ளது.