அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்காதவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் ஐந்தாம் தேதி வரை TNGASA என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் அந்தத் துறையில் காலியிடம் இருப்பின் வாய்ப்பு வழங்கவும், ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களை நிரப்பவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் உள்ள 164 கலை கல்லூரிகளில் 63% மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று முடிவடைந்துள்ளது