சென்னை மெட்ரோ இயக்கத்திற்கான மின்சார அணுகலை பெறுவதற்கு, சென்னை மெட்ரோ நிறுவனம் என்எல்சி நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு உள்ளது. அதன்படி, சென்னை மெட்ரோவின் பசுமை மின்சார அணுகல் என்எல்சி மூலம் வழங்கப்படும். மேலும், இந்திய பவர் எக்ஸ்சேஞ்ச் மூலம், மின்சாரம், என்எல்சியில் இருந்து சென்னை மெட்ரோவுக்கு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, மின் கொள்முதல் செலவு பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில், என்எல்சி பொது மேலாளர் பி வாசுகி மற்றும் சென்னை மெட்ரோ இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி ஆகியோர் கையெழுத்திட்டனர். சென்னை மெட்ரோ இயக்குனர் பிரசன்ன குமார் ஆச்சார்யா நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.