வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் அக்ரிஈஸி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் முழுவதும் பேட்டரியால் இயங்கும் அக்ரிஈஸி என்னும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உழவுப் பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்துவது போல களையெடுப்பதற்கு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாடு வேளாண்மை பலக்லைக்கழக துணை வேந்தர் முனைவர் சீதாலட்சுமி அக்ரிஈஸி இயந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
அக்ரிஈஸி இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலை ஆட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்ய முடியும். மேலும், களையெடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்வதன் மூலம் இந்த இயந்திரத்தை நான்கரை மணி நேரம் தொடர்ந்து இயக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.