இந்தியாவில் முதல் முறையாக ஹைப்பர் ஓ எஸ் -ல் இயங்கும் ஸ்மார்ட் போன் வெளியாக உள்ளது..
போக்கோ நிறுவனத்தின் எக்ஸ் 6 ப்ரோ 5ஜி கைபேசி விரைவில் வெளியாக உள்ளது. இந்த கைபேசி, ஷாவ்மி நிறுவனத்தின் ஹைப்பர் இயங்குதளத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில், ஹைப்பர் இயங்கு தளத்தில் வெளியாகும் முதல் கைபேசி சாதனமாக இது வரலாறு படைக்க உள்ளது. மேலும், போக்கோ நிறுவனத்தின் பிற மாடல்களிலும் ஹைப்பர் இயங்குதளத்திற்கான அப்டேட் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாவ்மி மற்றும் ரெட்மி கைபேசிகள் ஆகியவற்றிலும் ஹைப்பர் இயங்குதளத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுக்க முழுக்க ஹைப்பர் இயங்குதளத்தில் செயல்படும் முதல் கைபேசியாக, போக்கோ எக்ஸ் 6 ப்ரோ 5ஜி நாளை அறிமுகம் ஆகிறது.