தமிழக சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தொடங்கிய போது அதிமுக உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க கோரி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற கூறியதை தொடர்ந்து அவை காவலர்கள் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றினார். இது குறித்து சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,
ஒத்திவைப்பு தீர்மானம் கொடுத்தாலும் அதிமுகவினர் பேச தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சட்டசபையில் அமர்ந்து பேச அதிமுகவினருக்கு விருப்பமில்லாதது போன்று நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவினர் சட்டசபை மரபு மற்றும் விதிப்படி நடந்து கொள்ளவில்லை.
அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளக் கூடாது என்ற நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சட்டசபை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.