நடுவானில் சென்று கொண்டிருந்தபோது ஏர் யூரோப்பா நிறுவனத்தின் விமானம் குலுங்கியதில் பயணிகள் 30 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பெயின் நாட்டிலிருந்து உருகுவே நாட்டுக்கு ஏர் யூரோப்பா விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். அப்போது, நடுவானில் டர்புலன்ஸ் எனப்படும் அறிவியல் நிகழ்வு ஏற்பட்டதில் விமானம் அதிகப்படியாக குலுங்கி உள்ளது. கிட்டத்தட்ட 30 பேர் இந்த நிகழ்வின் போது காயம் அடைந்துள்ளனர். இந்த காரணத்தால், பிரேசில் நாட்டில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானம் குலுங்கிய காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் பயணி ஒருவர் தலைக்கு மேல் உள்ள காம்பார்ட்மெண்ட் பகுதியில் சிக்கி உள்ள காட்சி இடம்பெற்றிருந்தது.