செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறக்கபட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வடகிழக்கு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பு இருக்கும்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் குறுஞ்செய்தியின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.