அல்ஜீரியாவைச் சேர்ந்த ஓவியர் பென் இஸ்மாயில், கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது 49 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பென் இஸ்மாயில், அல்ஜீரியாவின் திசி மாவட்டத்திற்கு வந்தபோது, அங்கு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு தீ ஏற்படுவதற்கு இவரே காரணம் என்று வதந்தி பரவியதை அடுத்து, உள்ளூர் மக்களால் அவர் கொல்லப்பட்டார். இரக்கமின்றி அவர் தீ வைத்து எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது நடந்த வன்முறையில் மேலும் சிலரும் பலியாகினர். இந்த அதிர்ச்சி சம்பவம் உலக அளவில் பேசு பொருளானது.
இந்நிலையில், இந்த வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனையும், 28 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அல்ஜீரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.