மிக் ஜாம் புயலில் தமிழகத்தில் தென் மாவட்டம் மற்றும் சென்னையில் சில இடங்களில் வசித்த ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் பாதிப்படைந்தது.
கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டு மிக் ஜாம் புயலின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிப்படைந்தது. அதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்கள் ஆன திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வசித்த ஏழை மக்களின் வீடுகள் பெரும் சேதம் அடைந்தன. இந்நிலையில் தமிழக அரசு சேதம் அடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூபாய் இரண்டு லட்சம் வரையும், முழுமையாக சேதம் அடைந்த வீடுகளை புதிதாக காட்டுவதற்கு ரூபாய் 4 லட்சம் வரையும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதம் அடைந்த வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்ய மற்றும் புதிய கட்டுமானத்திற்கு மொத்தம் 45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.