மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராயலாம் - உச்ச நீதிமன்றம் 

March 22, 2023

மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து தகவல் சேகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்றலாம் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதி, நாட்டில் நிறைவேற்றப்படும் தூக்கு தண்டனையானது, மிகவும் கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்த […]

மரண தண்டனையை நிறைவேற்ற வலி குறைவான வழி ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து தகவல் சேகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்றலாம் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதி, நாட்டில் நிறைவேற்றப்படும் தூக்கு தண்டனையானது, மிகவும் கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். மேலும் மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா என்பது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

இதுதொடர்பாக விவாதம் நடத்தி, விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணிக்கு உத்தரவிடுகிறேன். தூக்கு தண்டனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu