அமெரிக்கா நிலவில் ஆய்வுகள் மேற்கொள்ள ஆய்வுக் கலத்தை அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் அஸ்ட்ரோபாட் டெக்னாலஜிஸ். இந்த நிறுவனத்தின் லூனார் லெண்டர் ஒன் விண்கலம் அந்த நாட்டின் புளோரிடா மாகாணம் கேப் கணாவேரல் ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. அந்த ஆய்வுக் கலம் யுனைடெட் லாஞ்ச் அலைன்ஸ் நிறுவனத்தின் வல்கன் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி அந்த ஆய்வுக் கலம் நிலவில் தரையிறங்கும் என்று கூறப்படுகிறது. வெற்றிகரமாக தரையிறங்கினால் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்ட முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமை அஸ்ட்ரோபாட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை சேரும். இதற்கு முன்னர் கடந்த 1972 ஆம் ஆண்டில் தான் அமெரிக்கா நிலவுக்கு ஆய்வு களத்தை அனுப்பியது.