உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு அட்டாக் கம்ஸ் என்ற அதிநவீன ஏவுகணைகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.அட்டாக் கம்ஸ் ஏவுகணைகள் சுமார் 190 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. மேலும், அட்டாக் கம்ஸ் என்ற ஒற்றை ஏவுகணையில் ஒரு குண்டுக்கு பதிலாக பல்வேறு வெடிகுண்டுகளை பொருத்தி ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கி அழிக்க முடியும். இதன் மூலம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பல பகுதிகளில் உக்ரைன் தாக்குதல் மேற்கொள்ள முடியும். அண்மையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.