ஏப்ரல் 28, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில், மாஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், ரஷ்ய ஆயுதங்கள், எண்ணெய் மற்றும் பிற பொருட்களின் இறக்குமதியை குறைக்குமாறும் இந்தியா மற்றும் பிற நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியது. ஆயினும்
இந்தியா ரஷ்யாவுடன் தனது கூட்டாண்மையை உருவாக்கியது, ஆனால் தற்போது அமெரிக்கா அதைச் செய்ய முடியாத நிலையில் இ௫ப்தாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி வெளிநாட்டு செயல்பாடுகள் மீதான செனட் ஒதுக்கீட்டு துணைக்குழுவின் காங்கிரஸின் விசாரணையில் கூறினார். அப்போது குடியரசுக் கட்சியின் செனட்டரான ஹேகெர்டி, இந்தியா-அமெரிக்க உறவு குறித்து பிளிங்கனின் கருத்துக்களைக் கேட்டதைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்க கூட்டாண்மை அடுத்த 10ஆண்டுகளில் மிக முக்கியமான கூட்டாண்மைகளில் ஒன்றாக இருக்கும் என்றும், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் மூலோபாய ஒருங்கிணைப்பு இருப்பதாகவும் பதில் ௯றினார். அதுமட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இந்தியாவின் பிரதமர் மோடி மற்றும் மற்ற தலைமையுடன் நேரடியாக ஈடுபட அதிக நேரம் செலவிட்டார்” என்று பிளிங்கன் கூறினார். மேலும் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இந்தியாவை ஒன்றிணைக்கும் குவாட்க்கு அமெரிக்கா ஆற்றல் அளித்தது இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்தி உள்ளது என்றார்.அதில்
சீனா ஒரு பெரிய பகுதியாகும்” என்றும் பிளிங்கன் கூறினார். பின்னர் ரஷ்யாவுடனான உறவுக்கு பல நாடுகள் இப்போது தங்களின் உறவுகள் மற்றும் சில நலன்களை மறுபரிசீலனை செய்கின்றன. மற்றும் இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி யில் நடந்த ஐ. நா பாதுகாப்புக்கவுன்சிலில் இந்தியா ரஷ்யாவுக்கெதிராக வாக்களிக்கவில்லை. எனவே உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை இந்தியா பகிரங்கமாக கண்டிக்காமல் மறைமுகமாக தீர்வு காண முயற்சித்து வருகிறது. என்றும் ௯றினார்