ஈகுவடாரில் அதிபர் டேனியேல் நோபோவா ராணுவ அவசர நிலையை அறிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அதில் பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவை பொது சொத்துகளை சேதப்படுத்தி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டன. இதன் விளைவாக, குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி போன்ற 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் பரவியுள்ளது. இதன் காரணமாக, அதிபர் டேனியேல் நோபோவா ராணுவ […]

ஈகுவடாரில் அதிபர் டேனியேல் நோபோவா ராணுவ அவசர நிலையை அறிவித்துள்ளார்.

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் பல கிளர்ச்சி குழுக்கள் செயல்படுகின்றன. அதில் பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இவை பொது சொத்துகளை சேதப்படுத்தி, அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கத்திற்கு பெரிய அச்சுறுத்தலாக மாறிவிட்டன. இதன் விளைவாக, குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி போன்ற 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் பரவியுள்ளது. இதன் காரணமாக, அதிபர் டேனியேல் நோபோவா ராணுவ அவசர நிலையை அந்த மாகாணங்களில் அறிவித்துள்ளார். மேலும், 20 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அதிபர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசாரும் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu