பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அமித்ஷா நாளை தமிழகம் வருகை தர உள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். அதில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். அதனைத் தொடர்ந்து தற்போது நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி நாளை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். பின்னர் மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நடைபெற உள்ள ரோடு ஷோவில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து மூன்று மணிக்கு நாகையில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மாலை 6:30 மணிக்கு தென்காசி ரோடு ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். ஏற்கனவே கடந்த வாரம் தமிழகம் வருவதாக இருந்த நிலையில் தமிழக சுற்றுப்பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.