பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அமித்ஷா வருகிற ஐந்தாம் தேதி தென்காசி வருகை தர உள்ளார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து தென்காசியில் வருகிற 5ஆம் தேதி உள்துறை மந்திரி அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளியில் வந்து இறங்குகிறார். பின்னர் ஆசாத் நகர் தென்காசி புதிய பஸ் நிலையம் வரை திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.