சைதன்யா நிதி நிறுவனத்தை கையகப்படுத்தும் அனன்யா பிர்லாவின் நிறுவனம்

August 10, 2023

ஆதித்திய பிர்லா குழுமத்தை சேர்ந்த ஸ்வதந்த்ரா மைக்ரோ பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சைதன்யா இந்தியா பைனான்ஸ் கிரெடிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அனன்யா பிர்லா கையெழுத்திட்டுள்ளார். கிட்டத்தட்ட 1479 கோடி ரூபாய்க்கு சைதன்யா நிறுவனம் கையகப்படுத்தப்படுகிறது. இது, நவி குழுமத்தின் கீழ் இயங்கும் நிதி நிறுவனம் ஆகும். மேலும், இந்த கையகப்படுத்தல், ஸ்வதந்த்ரா நிறுவனத்தின் முக்கிய வர்த்தக இணைப்பாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்வதந்த்ரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை […]

ஆதித்திய பிர்லா குழுமத்தை சேர்ந்த ஸ்வதந்த்ரா மைக்ரோ பைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சைதன்யா இந்தியா பைனான்ஸ் கிரெடிட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்த உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அனன்யா பிர்லா கையெழுத்திட்டுள்ளார். கிட்டத்தட்ட 1479 கோடி ரூபாய்க்கு சைதன்யா நிறுவனம் கையகப்படுத்தப்படுகிறது. இது, நவி குழுமத்தின் கீழ் இயங்கும் நிதி நிறுவனம் ஆகும். மேலும், இந்த கையகப்படுத்தல், ஸ்வதந்த்ரா நிறுவனத்தின் முக்கிய வர்த்தக இணைப்பாக சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்வதந்த்ரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 3.6 மில்லியன் ஆக உயரும். அத்துடன், இந்தியாவின் 20 மாநிலங்களில் 1517 கிளைகளாக விரிவாக்கம் ஆகும். மேலும், ஒட்டு மொத்த சொத்து மதிப்பு 12409 கோடியாக உயரும். ஸ்வதந்த்ரா நிறுவனத்திடம் சைதன்யா நிறுவனத்தை விற்றது திருப்தி அளிப்பதாக நவி நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதே வேளையில், இந்த கையகப்படுத்தல் மூலம் ஸ்வதந்த்ரா நிறுவனம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உள்ளதாக அனன்யா பிர்லா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu