சுமார் 4000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகளை ஆய்வு செய்ததில், மூளை புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க எகிப்தியர்கள் முயன்றுள்ளது தெரியவந்துள்ளது.
சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் மண்டை ஓடு ஒன்றும், 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் மண்டை ஓடு ஒன்றும் ஆய்வு செய்யப்பட்டது. இவற்றின் காலம் முறையே கிமு 2687 முதல் 2345 மற்றும் கிமு 663 முதல் 343 வரை என கணிக்கப்படுகிறது. இவை கேம்பிரிட்ஜ் டக் ஒர்த் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அதில் மிகப்பெரிய அளவில் கட்டிகள் இருந்ததை உறுதி செய்துள்ளனர். மண்டை ஓட்டில் ஆங்காங்கே சிறிய அளவிலான கட்டிகளும் இருந்துள்ளன. அவற்றின் அருகே கத்தி வைத்துக் கீறியதற்கான அடையாளமும் காணப்பட்டுள்ளது. எனவே, எகிப்தியர்கள் மூளை புற்றுநோயை குணப்படுத்துவதற்கு அறுவை சிகிச்சை முறையை பின்பற்றி உள்ளனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.