10 கோவில்களில் அன்னதான திட்டம் துவக்கம்

January 11, 2023

10 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் சூளை சீனிவாச பெருமாள், கொரட்டூர் பாடலாத்திரிசீயாத்தம்மன், கொளத்துார் சோமநாத சுவாமி ஆகிய மூன்று கோவில்கள்; விக்கிரவாண்டி அபிராமி ஈஸ்வரர்; வேலுார் அணைக்கட்டு உத்திரரங்கநாத சுவாமி; திருச்சி பிராட்டியூர் ரெட்டைமலை ஒண்டிகருப்பணசுவாமி, கோவை வடமதுரை விருந்தீஸ்வரர், வடவள்ளி கரிவரதராஜ பெருமாள்; ஈரோடு, மொடக்குறிச்சி அனுமனீஸ்வரர்; தென்காசி கடையம் பத்ரகாளியம்மன் ஆகிய 10 கோவில்களில் நேற்று அன்னதான திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், தமிழகத்தில், 754 கோவில்களில் […]

10 கோவில்களில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

சென்னையில் சூளை சீனிவாச பெருமாள், கொரட்டூர் பாடலாத்திரிசீயாத்தம்மன், கொளத்துார் சோமநாத சுவாமி ஆகிய மூன்று கோவில்கள்; விக்கிரவாண்டி அபிராமி ஈஸ்வரர்; வேலுார் அணைக்கட்டு உத்திரரங்கநாத சுவாமி; திருச்சி பிராட்டியூர் ரெட்டைமலை ஒண்டிகருப்பணசுவாமி, கோவை வடமதுரை விருந்தீஸ்வரர், வடவள்ளி கரிவரதராஜ பெருமாள்; ஈரோடு, மொடக்குறிச்சி அனுமனீஸ்வரர்; தென்காசி கடையம் பத்ரகாளியம்மன் ஆகிய 10 கோவில்களில் நேற்று அன்னதான திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், தமிழகத்தில், 754 கோவில்களில் மதிய வேளை அன்னதானமும், அவற்றில் எட்டு கோவில்களில் நாள் முழுதும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 10 கோவில்களில் அன்னதான திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 764 கோவில்களில் தினசரி 85 ஆயிரம் பக்தர்கள் பயனடைவர் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu