புதுச்சேரி முதல்வர் தீபாவளிக்கான திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அக்டோபர் 21-ம் தேதி புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்படுவதுடன், தீபாவளிக்கு இலவச அரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,000 உயர்த்தப்படும், இதன் மூலம் 21,329 பயனாளிகள் பலனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய உதவித்தொகை, நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும். இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அரசுக்கு ஆண்டு அடிப்படையில் 24.5 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.