முதலமைச்சர் உத்தரவின் பெயரில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் 39 ஓதுபவர்களை அமைச்சர் சேகர்பாபு நியமித்துள்ளார். இதில் 10 பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 25ஆம் தேதி 5பெண் ஓதுவார்கள் உட்பட 20 பேர் கோவில்களில் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணையை பெற்றுள்ளனர். அதில் சென்னை மயிலாப்பூர் முண்டகண்ணியம்மன் கோவிலில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்ற பெண் கோவிலில் ஓதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பெரம்பலூர் அரசு இசைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் தேவாரம் பயின்றுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக பி.எஸ்.சி பி.எட் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் ஓதுவார் பணிக்கு விண்ணப்பித்திருந்து இந்து சமய அறநிலையத்துறை கமிட்டி நடத்திய தேர்வில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அறநிலையத்துறையில் இன்னும் அதிக பெண் ஓதுபவர்கள் பணிக்கு வர வேண்டும் எனவும் தமிழக அரசின் வெற்றி பயணம் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.