மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கு சிகிச்சை அளிக்கும் மாத்திரையை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.
உலக அளவில் மக்களை பெரிதும் பாதிக்கும் மருத்துவ மனச்சோர்வு மற்றும் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (PPD) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க, Zurzuvae என்ற மருந்துக்கு, மருந்து நிறுவனங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலை நாடியுள்ளன. இப்போது வரை, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கான சிகிச்சையானது IV ஊசி மூலம் மட்டுமே கிடைக்கும் என்று மருந்து நிர்வாகம் கூறியிருந்தது.
மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு ஒரு பெண்ணின் இயல்பான செயல்பாட்டிற்கு திரும்பும் திறனை கடுமையாக பாதிக்கிறது. அதே சமயம் தாயின் குழந்தையுடனான உறவையும் பாதிக்கும். இந்த நோயானது ஏழு பெண்களில் ஒருவரை பாதிக்கிறது.














