கர்நாடகா சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் கொண்டு வருவதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடகா சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டால் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவு தேர்வை கர்நாடக அரசே நடத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.