அர்ஜென்டினா துணை ஜனாதிபதி படுகொலை முயற்சி!

September 5, 2022

அர்ஜெண்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸை மர்மநபர் ஒருவர் கொலைச்செய்ய முயற்சித்த போது அதிர்ஷடவசமாக உயிர்தப்பினார். கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வருகிறார். அவர் மீதான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய கிறிஸ்டினாவை பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், கிறிஸ்டினாவின் நெற்றி மீது துப்பாக்கியை வைத்து சுட முயன்றார். ஆனால் அந்த […]

அர்ஜெண்டினாவின் துணை ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னாண்டஸை மர்மநபர் ஒருவர் கொலைச்செய்ய முயற்சித்த போது அதிர்ஷடவசமாக உயிர்தப்பினார்.

கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வருகிறார். அவர் மீதான வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பிய கிறிஸ்டினாவை பார்ப்பதற்கு நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர், கிறிஸ்டினாவின் நெற்றி மீது துப்பாக்கியை வைத்து சுட முயன்றார். ஆனால் அந்த துப்பாக்கி வேலை செய்யவில்லை. உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து அவரிடம் இருந்த துப்பாக்கியை கைப்பற்றினர். அதில் 5 தோட்டாக்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். அந்த நபர் பிரேசிலைச் சேர்ந்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது குறித்து பேசிய அர்ஜெண்டினா ஜனாதிபதி அல்பெர்டோ பெர்னாண்டஸ், ராணுவ ஆட்சியில் இருந்து அர்ஜெண்டினா விடுதலை அடைந்த பிறகு நடந்த மிக மோசமான சம்பவம் இந்த கொலை முயற்சி என்று ௯றியுள்ளார். இதற்கிடையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் கிறிஸ்டினா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்தி கள் கூறுகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu