இரு நாடுகளின் நீண்டகால மோதலை நிறுத்தும் அமைதி ஒப்பந்தம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இன்று கையெழுத்தாகியது.
35 ஆண்டுகள் மோதிய ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் தலைவர்கள், அமெரிக்கா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்பட சம்மதித்தனர். ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, அஜர்பைஜானை நக்சிவானுடன் இணைக்கும் பெரிய போக்குவரத்து வழித்தடம் உருவாக்கப்படவுள்ளது. இந்த வழித்தட உரிமையை அமெரிக்கா கையகப்படுத்துகிறது. "டிரம்ப் பாதை" எனப்படும் இந்த திட்டம் இரு நாடுகளுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகளைத் தரும் என்று கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றாலும், எல்லை பகிரும் ஈரான் அமெரிக்காவின் அதிகப்படியான ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.














