கிழக்கு உக்ரைன் முழுவதும் மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டதற்கு ரஷ்யா தான் பொறுப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.
கார்கிவ் மற்றும் டோனெட்ஸ்க் பகுதிகள் இ௫ளில் மூழ்கியதற்கும் , ஜபோரிஜியா, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் சுமி பகுதிகளில் பாதி இ௫ளில் மூழ்கியதற்கும் ரஷ்ய பயங்கரவாதிளே காரணம் என ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மாஸ்கோ வேண்டுமென்றே குடிமக்களின் உள்கட்டமைப்பைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார். கைரிலோ திமோஷென்கோவால் கார்கிவில் நடந்த தாக்குதலில் தொழிற்சாலை தளத்தில் தீப்பிடித்தது. அதில் கார்கிவ் CHPP-5 மின் நிலையமும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கிழக்கு உக்ரைனில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை உக்ரேனியப் படைகள் மீண்டும் கைப்பற்றின. அதையடுத்து கிழக்கு உக்ரைன் மற்றும் சுமி , டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் மற்றும் போல்டவா பகுதிகளில் ரஷ்ய தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கார்கிவ் உட்பட கிழக்கு உக்ரைன் முழுவதும் ரயில்கள் இயங்கத் தாமதம் ஆனது. பின்னர் அப்பகுதிகளில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்சாரத்தை மீட்டெடுத்ததாக ஜெலென்ஸ்கி ௯றினார். இது குறித்து பேசிய உக்ரைனின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், ரஷ்யாவின் இத்தாக்குதல்கள், கிழக்கு உக்ரைனை உக்ரேனியப் படையினர் மீட்டெடுத்ததால் நடைபெற்றது எனக் ௯றினார்.