மணல் குவாரிகளில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் இதனை கவனிக்க தனியாக துறை அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக பண பரிமாற்றங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் 8 மணல் குவாரிகளில் அமலாக்க துறை சோதனை நடைபெற்றது. அதில் 4730 கோடி அளவிற்கு முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மணல் குவாரி முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் மணல் குவாரி நடவடிக்கைகளை கையாள தனிதுறையை உருவாக்க நீர்வளத் துறை முன்வந்துள்ளது. இந்த புதிய துறைக்கு மணல் குவாரி மற்றும் கண்காணிப்பு கழகம் என்று பெயர் சூட்டப்படலாம். தற்போதுள்ள சுரங்க மற்றும் கண்காணிப்பு அலுவலகங்களில் பொறியியல் அமைப்பு அதிகாரிகளின் கீழ் இந்த துறை செயல்பட என தெரிவிக்கப்பட்டுள்ளது.