நைஜீரியா தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் - 18 பேர் பலி

July 1, 2024

நைஜீரியா திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகினர். நைஜீரியாவில் நேற்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நடந்தது. குவோஜோ நகரில் உள்ள பொது மருத்துவமனையில் இன்னொரு குண்டு வெடிப்பு நடந்தது. பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் இன்னொரு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 48 பேர் காயமடைந்தனர். […]

நைஜீரியா திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.

நைஜீரியாவில் நேற்று அடுத்தடுத்து மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நடந்தது. குவோஜோ நகரில் உள்ள பொது மருத்துவமனையில் இன்னொரு குண்டு வெடிப்பு நடந்தது. பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் இன்னொரு குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 18 பேர் பலியாகியுள்ளனர். 48 பேர் காயமடைந்தனர். அவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

போகோ ஹரம் என்ற போராளி குழு கடந்த 10 ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் நடத்திய வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். எனினும் அவர்கள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்கவில்லை. இறுதி சடங்கில் நடந்த மூன்றாவது குண்டுவெடிப்பில் குழந்தையை முதுகில் சுமந்தபடி ஒரு பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu