உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏ ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து, குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி மாநில முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு, முன்னாள் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் கொல்லப்பட்ட வழக்கில், சகோதரர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். முன்னதாக, வியாழக்கிழமை, ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத், காவல்துறையினரின் என்கவுண்டர் நடவடிக்கையில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்களால் சகோதரர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனவே, நலனைக் கருதி, 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற எதிர்க்கட்சிகள், உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.