சீக்கியர்கள் பள்ளிகளில் கிர்பான் எனப்படும் புனித வாள் எடுத்துச் செல்ல தடை விதித்த சட்டத்தை ஆஸ்திரேலியா நீதிமன்றம் ரத்து செய்தது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள நீதிமன்றம், சீக்கிய மாணவர்கள் வளாகத்தில் கிர்பான் அணிய தடை விதித்த சட்டத்தை ரத்து செய்துள்ளது. சீக்கியர்கள் தங்கள் நம்பிக்கையின் ஒரு பகுதியாக எல்லா நேரங்களிலும் எடுத்துச் செல்ல வேண்டிய ஐந்து மதச் சின்னங்களில் ஒன்றான கிர்பானுக்கு எதிரான தடை பாகுபாடு காட்டுவதாகக் கூறி, கமல்ஜித் கவுர் அத்வால் என்ற சீக்கியர் கடந்த ஆண்டு குயின்ஸ்லாந்து அரசு மீது வழக்கு தொடர்ந்தார். அதனை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது.
குயின்ஸ்லாந்து நீதிமன்றம் வியாழன் அன்று அளித்த தீர்ப்பில், "இனப் பாகுபாடு சட்டத்தின் (RDA) கீழ் இந்த தடை அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று தெரிவித்துள்ளது.