ஆஸ்திரேலியா இந்தியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சேம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தற்போது இந்திய மண்ணில் ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில் ஆட உள்ளது. இதில் ஒரு நாள் போட்டியின் தொடர்ச்சியாக 20 ஓவர் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகள் மோதிய கடைசி ஐந்து 20 ஓவர் போட்டியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் 27 வது ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா பதினைந்தில் வெற்றி, ஆஸ்திரேலியா பத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. நாளைய ஆட்டம் இரவு 7:00 மணிக்கு ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.