'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம்: தினமும் 10 லட்சம் அட்டைகள் வழங்க இலக்கு

September 26, 2022

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் […]

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் தினமும் 10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவக் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி, ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. கடந்த 2020-ம் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டத்தை அறிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களும் ஒரே டிஜிட்டல் அட்டையில் சேமித்து வைக்கப்படும். டிஜிட்டல் அட்டை மூலம் நோயாளியின் உடல்நிலை தொடர்பான அனைத்து விவரங்களையும் மருத்துவர் எளிதாக அறிந்துகொள்ள முடியும் என்று பிரதமர் மோடி கூறினார். முதல்கட்டமாக 6 யூனியன் பிரதேசங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தேசிய அளவில் `ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்' என்ற பெயரில் தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.

இந்நிலையில்,ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா டெல்லியில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில், பயனாளிகளுக்கு அட்டைகள் வழங்கப்படுகின்றன. தொடக்ககாலத்தில் தினமும் 1.50 லட்சம்பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. அடுத்தகட்டமாக தினமும்10 லட்சம் அட்டைகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “ஆயுஷ்மான் பாரத் மருத்துவக்காப்பீடு திட்டத்தில் பயனாளிகளுக்கு 14 இலக்கங்கள் கொண்ட அடையாள எண் வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் பொது சேவை மையங்கள் மூலம், இலவசமாக டிஜிட்டல் அட்டைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தில் நாடு முழுவதும் 28,300 மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 46 சதவீதம் தனியார் மருத்துவமனைகள்” என்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu